Thursday, April 17, 2008

நினைத்தேன் உனை

நாடினேன் உன் அன்பை

நனைந்தேன் உன் நினைவுகளில் -அது

நனைத்ததே என் உயிரை

நிந்தித்திடாதே எனை

நீக்கிடாதே உன்னிலிருந்து

நியாயம்தான் என் காதல் என

நினைத்திடு ஒரு நிமிடம்

நிச்சயமாய் புரிந்திடும் உனக்கும்

நித்திரையிலும் உனை மறக்காத

நெய்தல் நிலம் போன்ற என்

பாசம் !!

Tuesday, April 15, 2008

எச்சரிக்கை !!எச்சரிக்கை !!

எல்லாம் வாருங்க
எல்லாம் கேளுங்க
தமிழனத்தின்
கதை இதுங்க!!
வீரத்தமிழனின்
கதை இதுங்க!!
நாடும் , வீடும்
துறந்து போனான்
கடலும் , மலையும்
கடந்து போனான்
காசும், பணமும்
சேரக்கண்டான்
புகழும், மாலையும்
சேரக்கண்டான்- ஆனா
மதிப்பு மட்டும்
வந்து சேரலங்க!!
மிதிப்பும் கொதிப்பும்
தான் மிச்சமுங்க!!
வாழ நாடு கேட்டா?
ஈழத்தில் படுகொலைங்க!!
மலேசியாவும் தமிழனைத்தான்
தீண்டுதுங்க!!
குடிக்க தண்ணீர் கேட்டா
ஆந்திரா ஆத்திரத்தில ஆடுதுங்க
கேரளம் அணையைத்தான் கட்டுதுங்க
கர்நாடகம் கருநாகமா கொத்துதுங்க!!
பயிர் வாட்டத்த
போக்கத்தான் தண்ணீர் வரலங்க
உயிர் வாட்டத்த போக்கவும்
தண்ணீர் வரலங்க
இளிச்ச வாய் இனம்
தமிழினம் என்பதா?
வந்தோரை வாழ வைத்து
வீழ்ந்த இனம் என்பதா?
ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயமுங்க
தமிழனின் வீரம் மட்டும் சாகலங்க
உணர்வும்தான் தீரலங்க
நீர்பூத்த நெருப்பா என்றுமே இருக்குமுங்க
ஒரு நாள் அதுவும் தான் வெடிக்குமுங்க
தீண்டியோரை தீக்கிரையாக்குமுங்க
புறநானூற்று வீரத்தமிழன்
புறமுதுகு காட்டி பகைவரைத்தான்
விரட்டும் வரை
பூமிதனில் தன் புகழை
நிலை நாட்டும் வரை
இல்லை எவர்க்கும் கண்ணுறக்கமுங்க
இது வாய் சவடால் இல்லங்க
எச்சரிக்கை !!எச்சரிக்கை !!