Saturday, January 4, 2014

அம்மா உனக்கு இருக்கின்றேன்...

என் மகன் இலக்கணன் அழுது கொண்டே இருந்தான் அவனுக்காக எழுதியது


அம்மா உனக்கு இருக்கின்றேன்
'ஆ' என்று அழாதே
இலக்கணா என் மகனே
'ஈ' என்றே சிரித்திடு
உழைப்பே என்றும் உன்னதம் - அதற்கு
ஊட்டச்சத்து மிக அவசியம்
எண்ணம் நன்றாய் இருந்திட்டால்
ஏற்றம் உண்டு உனக்கு
ஐயம் வேண்டாம் என் சொல்லில்
ஒன்றே மாந்தர் யாவரும்
ஓங்கி எழுந்தே உரைத்திடு
ஒளவையின் ஆத்திச்சூடி
எ. .கு உள்ளம் கொண்டிடு