Tuesday, November 25, 2014

KaniBlog: உலகறியும் நாள் தொலைவில் இல்லை!!

KaniBlog: உலகறியும் நாள் தொலைவில் இல்லை!!

உலகறியும் நாள் தொலைவில் இல்லை!!

ஈழத்து மண்
ஈன்ற வீரம்
சிங்கள வெறியின்
சிரம் அறுத்த ஆற்றல்
வேங்கையின் பாய்ச்சலில்
விடுதலை பறை கொண்டு
இயற்கையின் புதல்வனாய்
அடிமை விலங்கொடிக்க
தமிழினத்தின் புகழ் மீட்க
தரணியில் பிறந்தவன் நீ!!
முப்படை நிறுவினாய்
தற்கொலைப்படை படைத்தாய்
தமிழ்மண்ணை மீட்டெடுக்க!
செஞ்சோலை அமைத்தாய்
செம்மொட்டுக்களுக்காக!!
எதிரிப் படை நடுங்கியது
உன்னெதிரில்;
உன் போர்முறை கண்டு
 சிதறி ஓடியது;
எதிர் நின்று வீழ்த்த முடியாத
உன் வீரத்தை
வஞ்சகக் கூட்டம்
வஞ்சித்து வீழ்த்தியது!!
வீழ்த்தப்பட்ட வீரம்
மாண்டுவிடவில்லை
மீண்டெழும் ஈழத்தை மீட்க
என உலகறியும் நாள்
தொலைவில் இல்லை!!