விதையின் விளைச்சல்
விளைந்திடும் நிலத்தால்
விண்மீனின் வெளிச்சம்
வானின் இருளால்
மலைகளின் கம்பீரம்
விண்னைத்தொடும் உயரத்தால்
மழையின் பொழிவு
துளிகளின் தொடர்ச்சியால்
அறிவின் தெளிவு
கற்றோரின் தொடர்பால்
உலகத்தின் துடிப்பு
உயிர்களின் தொடர்ச்சியால்
இரவும் பகலும்
பூமியின் சுழற்ச்சியால்
முகத்தின் அழகு
அகத்தின் எண்ணத்தால்
மனிதனின் வாழ்க்கை
தன்னம்பிகையின் சுவடால்
கவிஞனின் கவிதை
எண்ணங்களின் வெளிப்பாடால்
இல்லறத்தில் மகிழ்ச்சி
புரிதலின் வெற்றியால்
கனவின் மாயம்
தூக்கத்தின் தெளிவால்
வாழ்வின் வெற்றி
அன்பின் அரவணைப்பால்
காதலில் இன்பம்
காதலரின் இடைவெளியால்
மனிதனின் மகத்துவம்
மனிதத்தின் வெளிப்பாடால்!!
Thursday, March 20, 2008
உனைநான்தான் பிரியேன்!!
என்னையும் விரும்பிட ஓர் உயிர்
என்னையும் நேசித்திட ஓர் உறவு
எனக்கெனவே வாழ்ந்திட ஓர் உருவம்
என்னை உலகமாய் ஏற்றிட ஓர் உலகம்
எத்துனை இன்பம், எத்துனை இன்பம்
என் தலைவனின் அன்பில்!!
எத்துனை இறுக்கம் ,எத்துனை இறுக்கம்
என்ஐ உன் அரவணைப்பில்!!
எத்துனை இனிப்பு ,எத்துனை இனிப்பு
என் மன்னவன் தரும் முத்தத்தில்
எத்துனை துன்பம், எத்துனை துன்பம்
ஏற்ற போதிலும் என் உரியவனே!!
எந்நாளும் உனைநான்தான் பிரியேன்!!
என்னையும் நேசித்திட ஓர் உறவு
எனக்கெனவே வாழ்ந்திட ஓர் உருவம்
என்னை உலகமாய் ஏற்றிட ஓர் உலகம்
எத்துனை இன்பம், எத்துனை இன்பம்
என் தலைவனின் அன்பில்!!
எத்துனை இறுக்கம் ,எத்துனை இறுக்கம்
என்ஐ உன் அரவணைப்பில்!!
எத்துனை இனிப்பு ,எத்துனை இனிப்பு
என் மன்னவன் தரும் முத்தத்தில்
எத்துனை துன்பம், எத்துனை துன்பம்
ஏற்ற போதிலும் என் உரியவனே!!
எந்நாளும் உனைநான்தான் பிரியேன்!!
Subscribe to:
Posts (Atom)