Thursday, March 20, 2008

எதனால்?

விதையின் விளைச்சல்
விளைந்திடும் நிலத்தால்
விண்மீனின் வெளிச்சம்
வானின் இருளால்
மலைகளின் கம்பீரம்
விண்னைத்தொடும் உயரத்தால்
மழையின் பொழிவு
துளிகளின் தொடர்ச்சியால்
அறிவின் தெளிவு
கற்றோரின் தொடர்பால்
உலகத்தின் துடிப்பு
உயிர்களின் தொடர்ச்சியால்
இரவும் பகலும்
பூமியின் சுழற்ச்சியால்
முகத்தின் அழகு
அகத்தின் எண்ணத்தால்
மனிதனின் வாழ்க்கை
தன்னம்பிகையின் சுவடால்
கவிஞனின் கவிதை
எண்ணங்களின் வெளிப்பாடால்
இல்லறத்தில் மகிழ்ச்சி
புரிதலின் வெற்றியால்
கனவின் மாயம்
தூக்கத்தின் தெளிவால்
வாழ்வின் வெற்றி
அன்பின் அரவணைப்பால்
காதலில் இன்பம்
காதலரின் இடைவெளியால்
மனிதனின் மகத்துவம்
மனிதத்தின் வெளிப்பாடால்!!

No comments: