Thursday, March 20, 2008

உனைநான்தான் பிரியேன்!!

என்னையும் விரும்பிட ஓர் உயிர்
என்னையும் நேசித்திட ஓர் உறவு
எனக்கெனவே வாழ்ந்திட ஓர் உருவம்
என்னை உலகமாய் ஏற்றிட ஓர் உலகம்
எத்துனை இன்பம், எத்துனை இன்பம்
என் தலைவனின் அன்பில்!!
எத்துனை இறுக்கம் ,எத்துனை இறுக்கம்
என்ஐ உன் அரவணைப்பில்!!
எத்துனை இனிப்பு ,எத்துனை இனிப்பு
என் மன்னவன் தரும் முத்தத்தில்
எத்துனை துன்பம், எத்துனை துன்பம்
ஏற்ற போதிலும் என் உரியவனே!!
எந்நாளும் உனைநான்தான் பிரியேன்!!

1 comment:

Mani said...

Something fishy ;)