Sunday, March 22, 2009

பல காலம் வாழ்ந்திடுக!!

வாழ்க்கை இணைநல

ஒப்பந்த விழாவே

திருமணமாம் புரிந்திடுக!!

இணையர்களாய் இணைந்தே

இனிதாய் நற்செயல்கள்

பல புரிந்திடுக!!

தமிழின் இனிமைபோல்

இல்லறம் இன்பமாய்

நடத்தியே மழலைச்

செல்வங்கள் அன்பின்

சின்னங்கள் என்றே

அளவாய் பெற்று மகிழ்ந்திடுக!!

இணையர் நாம்

இருவரும் வாழ்வினில் நண்பர்கள்

என்றே தெளிந்திடுக!!

இனிதாய் இணைந்தோம்

வாழ்வினில் ஒருவருக்கொருவர்

தாழ்ந்தவரும் அல்ல

அடிமையும் அல்ல

என்றே பகன்றிடுக!!

இன்பமும் துன்பமும்

எது வரினும்

வற்றிடாது நமக்குள்

அன்பென்னும் ஊற்று

என்றே முழங்கிடுக!!

நல்லதொரு குடும்பம்

பல்கலைக்கழகம் என்றே

தங்கள் இனிய

குடும்பந்தினை வழிநடத்திடுக!!

நம் தாய் தமிழ்நாட்டிற்கு

உழைப்பதே உவகை என்றே

இனப்பற்று கொண்டிடுக!!

தமிழ்தொண்டு செய்திடுக!!

பல காலம் வாழ்ந்திடுக!!

மதப் பற்று துறந்து

மனிதப் பற்று கொண்டு

மக்களனைவரையும் நேசித்திடுக!!

பல காலம் வாழ்ந்திடுக!!

No comments: