Sunday, July 28, 2013

கவிதை!!

எழுதத்தான்
நினைக்கின்றேன்
எதைப்பற்றி எழுத
என்றே வியக்கின்றேன்
வியப்பினையும்
விடுகதையையும்
விநாடிப்பொழுதில்
கவிதையாய்  புனைந்திட
வார்த்தைகளை கோர்க்கின்றேன் ...
 கவிதை
சரமாய் ,
சாரலாய் ,
சினமாய் ,
காதலாய் ,
வரிக்கப்படும்
எனினும்
கனப்பொழுதில்
ஆழ்துளையிட்டு
ஆணிவேராய்
ஆட்கொள்ளும்
வரிகளாய்
மலரும் எதுவும்
கவிதையே !!

No comments: