Tuesday, January 8, 2008

ஆசை ஆசையாய்...

மனம் என்ற கருவறைக்குள்
தினம் நான் சுமக்கும்
நித்தமும் என் மனதில்
நிறைந்திருக்கும் என்
மன்னவனே!!
உன் தோழியாய் வாழ்ந்திட ஆசை
உன் தோளில் நானும் சாய்ந்தாட ஆசை
உன் துணைவியாய் வாழ்ந்திட ஆசை
உன் துன்பத்தில் துணையாய் இருந்திட ஆசை
உன் இணையராய் இணைந்திட ஆசை
உன்னோடு இணைபிரியாமல் வாழ்ந்திட ஆசை
உன் தாயாய் இருந்திட ஆசை
அனுபொழுதும் உனை தாலாட்டிட ஆசை
உன் விழியாய் இருந்திட ஆசை
உன் விழி நீர் துடைக்கும் விரலாய்
இருந்திட ஆசை
உன் கனவாய் இருந்திட ஆசை
உனை களவாடிட ஆசை
உன் ஒலியாய் இருந்திட ஆசை
உன்னுள் ஒளிந்து உனை கொல்ல ஆசை
உன் மகிழ்ச்சியாய் இருந்திட ஆசை
உனை மகிழ்விக்க ஆசை
உன் மனதில் என்றுமே வாழ்ந்திட ஆசை
உனை மறக்காமல் இருந்திட ஆசை
உன்னுள் கரைந்திட ஆசை
உன்னில் சரிபாதியாய் வாழ்ந்திட ஆசை
உன்னொடு வாழும் வாழ்க்கைக்காக
காத்திருப்பேன் எதிர்ப்பாத்திருப்பேன்
ஆசை ஆசையாய்...

No comments: