Tuesday, January 22, 2008

மாறுமா இந்நிலை!!??

என் நண்பர் என்னை தன் நண்பருக்கு அறிமுகம் செய்தார்
இவங்களுக்கு தமிழ் பற்று அதிகம்... தமிழ்ல கவிதைகள் எழுதுவார்கள் என்று...

எனக்குள் சிரித்துக்கொண்டாலும் அந்தச் சிரிப்பு வேதனையின் வெளிப்பாடு!!

தமிழ் என் தாய்மொழி. அதில் என் எண்ணங்களை பதிவு செய்வதற்கும் என் மொழி பற்றுக்கும் என்ன தொடர்பு!! அது இயற்கை!!

யாரும் ஒரு மலையாள கவிஞரிடம் சென்று உங்களுக்கு
மலையாளப் பற்று அதிகமா? கவிதைகள் மலையாளத்தில் எழுதுகின்றீரே என்று கேட்பதில்லை !!

தமிழ் நாட்டில் மட்டும் ஏன் இந்த நிலை?
தாய் மொழியில் எழுதினாலே அது மொழிப்பற்று என்று நினைக்கும் அவல நிலை என் மனதை வாட்டியது!!

மாறுமா இந்நிலை!!??

No comments: