அம்மா !!
என்று அழைத்தபடி
சிறுமி புத்தக பையோடு
தன் தாயை அணைக்கச் சென்றாள்!
மகிழ்ச்சி தந்த அவசரத்தில்
ஒரு சிறுமியின் மீது மோதினாள்
புத்தகங்கள் சிதறின!!
அதை எடுத்து தந்த அந்த பிஞ்சு கைகள்
தடவி பார்த்தன புத்தகங்களை
மறு கையில் கற்கள் சுமக்கும்
கூடையுடன்…..
ஏக்க ரேகைகள் முகத்தில்!!
கை ரேகைகளோ அழிந்த நிலையில்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment