Wednesday, January 23, 2008

உண்மை நிலை!!

பெண் என்றாலே சமையல் வேலைகளுக்கும், வீட்டினை நிர்வாகிக்கவும் என்ற நிலை இன்று ஒரளவிற்கு நகர் புறங்களில் மாற்றம் பெற்றிருக்கின்றது என்றாலும்,

சில நேரங்களில் சில செயல்பாடுகளை பார்க்கின்றபோதும், எழுத்துக்களை வாசிக்கின்றபோதும் பெண்களை இன்றும் ஒரு சில வேலைகளுக்காக சித்தரிப்பது என்பது வேதனையை மட்டும் அல்ல கோபத்தையும் ஏற்படுத்தும்!!

நாம் பள்ளிகளில் படிக்கின்றபோது பாடப் புத்தகத்தில் பார்த்திருப்போம்,

அம்மா காய் அரிகின்றாள்
அப்பா செய்தித்தாள் படிக்கின்றார்
அக்காள் பெருக்கின்ற வேலை செய்கின்றாள்
தம்பி படிக்கின்றான்

என்று எழுதி இருக்கும்.(படத்தோடு)

சினிமா பாடல்கள் மட்டும் விதிவிலக்கா??

உன் சமையல் அறையில் நான் உப்பா? சக்கரையா? என்று பெண்னுக்கும்
நீ படிக்கும் அறையில் நான் கண்களா?புத்தகமா? என்று
ஆணுக்கும்

என்று வரிகள் தொடரும்...

பெண்கள் முன்னேற்றத்தை பற்றி புரட்ச்சியாக எழுதும் புரட்சி கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கூட,

இந்திக்கு தமிழ் நாட்டில் ஆதிக்கமாம்
நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே
................
என்ற கவிதை வரிகளில் இறுதியாக

மங்கை ஒருத்தி தரும் சுகமும்
எங்கள் மாத்தமிழுக்கு ஈடில்லை என்போம் என்பது

சிறு நெருடலைத் தரும்...

இப்படி கவிஞர்களின் வர்ணனைக்குப் பயன்படும் பெண்களைப் பற்றிய வரிகள் என்றுமே வேதனைதான்!!

இதில் , பெருமையாக ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால்
ஒரு பெண் இருக்கின்றாள் என்றால்..

ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் அவள் பட்ட துன்பங்களும் வலியும் தான் உள்ளது என்பது உண்மை நிலை!!

No comments: