வெண்ணிலவே,
என் வானில்
தோன்றிய
ஒளிநிலவே!!
என் கண்நிலவாய்
உனைக் காப்பேன்
என்றும் கவின் நிலவே!!
எழில் நிலவே,
வளர்பிறையாய் நீ வளர
தேய்பிறையாய்
என் வாழ்வளிப்பேன்,
முழு நிலவாய்
ஒளிர்ந்திடு வாழ்வில்!!
என் மடியில்
பூத்த தங்கநிலவே,
வான் நிலவிலும்
களங்கம் இருக்கலாம்
என் வாழ் நிலவே
நீயோ என்றுமே
களங்கமற்ற
தரை நிலவு!!
பொன்னிலவே ,
பிறர் போற்றிட
பொழிந்திடு மழையாய் அன்பினை
வாழும் காலம் தோறும்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment