Wednesday, February 13, 2008

பாதை மாறாமல்...

உயிரே!!
என் இதயத்தை துளைத்து
உட்புகுந்தாய்,
உட்புகுந்ததால்
என் உணர்வானாய்
எனை மீண்டும் பிறப்பித்தாய்!!
ஓடும் என் உதிரத்தில்,
இதயத்துடிப்பில் ,
என் சுவாசக்காற்றில்,
இரண்டறக் கலந்தாய்!!
என் வாழ்வின் பாதையாய்
என்னுடன் பயணித்தாய்!!
நம் பயணங்கள் முடியலாம்
நம் காதலும், பாசமும்
பாதை மாறாமல்
என்றுமே தொடரும்!!

No comments: