Wednesday, February 13, 2008

உழைப்பு!!

வாழ்வின் கசப்பு
தீர்க்கும் உழைப்பு
முதலில் துவர்ப்பு
பின்பு வாழ்வே இனிப்பு
அதுதான் உழைப்பு
தரும் சிறப்பு!!
உடல் உழைப்பு தரும்
வியர்வை , கரிப்பு!! -ஆனால்
வாழ்வில் அது தரும் மதிப்பு
விடுத்திடு சலிப்பு,
அல்லும் பகலும் ஏற்றிடு உழைப்பு
அதுவே வாழ்வின் துடிப்பு!!
சோம்பலுக்கு கொடு விடுப்பு
பின் வாழ்வில் முன்னேற ஏது தடுப்பு?
உழைப்பு தரும் சிறப்பு,
அதுவே உலக நடப்பு!
இன்றே கொண்டிடு
சுறுசுறுப்பு பின்
வாழ்வில் என்றுமே
கலகலப்பு!!

No comments: