நாம் ஒன்றாய் இருந்த
நொடிகளை நினைவென்னும்
நூலில் கோர்த்துள்ளேன்….
உன் முத்துச் சிரிப்பு
உன் காந்த பார்வை
உன் சிவந்த வெட்கம்
உன் குறும்பு பேச்சு
உன் கொலுசின் ஒலி
உன் காதணிகளின் ஆடல்
உன் மென்மை விரல்கள்
உன் பூப்போன்ற பாதம்
உன் மெல்லிய விசும்பல்
உன் அழகிய கொஞ்சல்
உன் சிக்கனமான சினுங்கல்
அனைத்துமே தவனை முறையில்
எனை கொல்லுதடி
தேடிப் பார்க்கிறேன் உன்னை
காணவில்லை நீ
உன் நினைவுகளை தந்து –எனை
உறையச் செய்யும்
என் காதல் தலைவியே!!
நாம் ஒன்றாய் இருந்த
நொடிகளை நினைவென்னும்
நூலில் கோர்த்துள்ளேன்…என்றும்
கோர்த்துக்கொண்டே இருப்பேன்…
உனை என்னுள் சேர்த்துக் கொள்ள
துடிப்பேன்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment