குப்பைகளுக்கு மட்டுமா?- சில நேரங்களில்
மொட்டுகளுக்கும் தற்காலிக கருவறை
மனிதர்களில் இல்லா ஒற்றுமை
குப்பைத்தொட்டியில் உள்ள குப்பைகளிடம்!!
சிலருக்கு காகித வங்கியாய்,
சிலருக்கு உணவு விடுதியாய்,
சிலருக்கு தங்கிடும் இல்லமாய்!!
Thursday, February 28, 2008
பாரம்
சுமக்க பாரம் என
சுமையை இறக்கிவிடவில்லை தாய்!!
பாரம் பாராமல் தொட்டில் தாலாட்டைவிட
மார்பில் தாலாட்டிய தந்தை!!
இன்று விழுதுகளுக்கு பாரமாய்...
பாரத்தை தாங்கிய ஆலமரங்கள்,
முதியோர் இல்லத்தில்!!
சுமையை இறக்கிவிடவில்லை தாய்!!
பாரம் பாராமல் தொட்டில் தாலாட்டைவிட
மார்பில் தாலாட்டிய தந்தை!!
இன்று விழுதுகளுக்கு பாரமாய்...
பாரத்தை தாங்கிய ஆலமரங்கள்,
முதியோர் இல்லத்தில்!!
Tuesday, February 26, 2008
என் ஆசை மச்சானே!!
கணினியை காலமும் பார்த்திருக்கும்
என் ஆசை மச்சானே
கொஞ்சம் கண்களை தான் சிமிட்டிடுங்க
கொஞ்சம் என்னையும் தான் பார்த்திடுங்க
மாலை சூரியன் போனதும் அறியாம
கடுமையாதான் உழைச்சிடும் என் மச்சானே
காசும் பணமும் பெரிசு இல்ல ராசாவே!
பாசமும் நேசமும் தான் பெரிசுன்னு புரிஞ்சிடுங்க!!
அவியலும் பொரியலும் கைசுட்டு கால்சுட்டு
நானும்தான் ஆக்கி வைக்க
அதை பக்குவமா பரிமாற கனவுதான் நானும் வச்சேன்
கனவாதான் போச்சுதுங்க
சோறும் கறியும் ஆறித்தான் போனதுங்க!!
முத்தம் நூறு கொடுக்க
அப்பா எங்கனு கேட்டு கேட்டு
முத்தான நம்ம புள்ளதான்
ஏக்கத்துல தூங்குதுங்க!!
சனியும் ஞாயிறும்
சட்டுனு போகுது
சாவகாசமா பேசிட
அவகாசமும் இல்லங்க!!
சிரிச்சு பேசவும்
தோள்ல சாஞ்சிடவும்
காதுல கதைக்கவும்
நேரம் தான் இல்லங்க!!
கணினியை காலமும் பார்த்திருக்கும்
என் ஆசை மச்சானே
கொஞ்சம் கண்களை தான் சிமிட்டிடுங்க
கொஞ்சம் என்னையும் தான் பார்த்திடுங்க
என் ஏக்கத்தையும் புரிஞ்சிடுங்க!!
என் ஆசை மச்சானே
கொஞ்சம் கண்களை தான் சிமிட்டிடுங்க
கொஞ்சம் என்னையும் தான் பார்த்திடுங்க
மாலை சூரியன் போனதும் அறியாம
கடுமையாதான் உழைச்சிடும் என் மச்சானே
காசும் பணமும் பெரிசு இல்ல ராசாவே!
பாசமும் நேசமும் தான் பெரிசுன்னு புரிஞ்சிடுங்க!!
அவியலும் பொரியலும் கைசுட்டு கால்சுட்டு
நானும்தான் ஆக்கி வைக்க
அதை பக்குவமா பரிமாற கனவுதான் நானும் வச்சேன்
கனவாதான் போச்சுதுங்க
சோறும் கறியும் ஆறித்தான் போனதுங்க!!
முத்தம் நூறு கொடுக்க
அப்பா எங்கனு கேட்டு கேட்டு
முத்தான நம்ம புள்ளதான்
ஏக்கத்துல தூங்குதுங்க!!
சனியும் ஞாயிறும்
சட்டுனு போகுது
சாவகாசமா பேசிட
அவகாசமும் இல்லங்க!!
சிரிச்சு பேசவும்
தோள்ல சாஞ்சிடவும்
காதுல கதைக்கவும்
நேரம் தான் இல்லங்க!!
கணினியை காலமும் பார்த்திருக்கும்
என் ஆசை மச்சானே
கொஞ்சம் கண்களை தான் சிமிட்டிடுங்க
கொஞ்சம் என்னையும் தான் பார்த்திடுங்க
என் ஏக்கத்தையும் புரிஞ்சிடுங்க!!
சிற்பிகள்!!
இன்றைய குழந்தைகள்
வருங்கால இந்தியாவின்
சிற்பிகள்!!
ஓ!!
அதனால் தான்
கல்லும் மண்ணும் சுமக்கின்றனரோ??!!
வருங்கால இந்தியாவின்
சிற்பிகள்!!
ஓ!!
அதனால் தான்
கல்லும் மண்ணும் சுமக்கின்றனரோ??!!
அறிவிற்கு பொருந்தா பேராசை!!
எப்பொழுதும் கணிப்பொறியை
நோக்கிடும் உன் கண்கள்,
உன்னை தேடும் என் விழிகள்,
இமைக்கொட்டாமல் உனை பார்த்தபடி நான்
எனை மறக்க,
கணிப்பொறியாய் நான் மாறிடக் கூடாதா??
நோக்கிடும் உன் கண்கள்,
உன்னை தேடும் என் விழிகள்,
இமைக்கொட்டாமல் உனை பார்த்தபடி நான்
எனை மறக்க,
கணிப்பொறியாய் நான் மாறிடக் கூடாதா??
கண்ணீர்த்துளிகள்
Wednesday, February 13, 2008
பாதை மாறாமல்...
உயிரே!!
என் இதயத்தை துளைத்து
உட்புகுந்தாய்,
உட்புகுந்ததால்
என் உணர்வானாய்
எனை மீண்டும் பிறப்பித்தாய்!!
ஓடும் என் உதிரத்தில்,
இதயத்துடிப்பில் ,
என் சுவாசக்காற்றில்,
இரண்டறக் கலந்தாய்!!
என் வாழ்வின் பாதையாய்
என்னுடன் பயணித்தாய்!!
நம் பயணங்கள் முடியலாம்
நம் காதலும், பாசமும்
பாதை மாறாமல்
என்றுமே தொடரும்!!
என் இதயத்தை துளைத்து
உட்புகுந்தாய்,
உட்புகுந்ததால்
என் உணர்வானாய்
எனை மீண்டும் பிறப்பித்தாய்!!
ஓடும் என் உதிரத்தில்,
இதயத்துடிப்பில் ,
என் சுவாசக்காற்றில்,
இரண்டறக் கலந்தாய்!!
என் வாழ்வின் பாதையாய்
என்னுடன் பயணித்தாய்!!
நம் பயணங்கள் முடியலாம்
நம் காதலும், பாசமும்
பாதை மாறாமல்
என்றுமே தொடரும்!!
உழைப்பு!!
வாழ்வின் கசப்பு
தீர்க்கும் உழைப்பு
முதலில் துவர்ப்பு
பின்பு வாழ்வே இனிப்பு
அதுதான் உழைப்பு
தரும் சிறப்பு!!
உடல் உழைப்பு தரும்
வியர்வை , கரிப்பு!! -ஆனால்
வாழ்வில் அது தரும் மதிப்பு
விடுத்திடு சலிப்பு,
அல்லும் பகலும் ஏற்றிடு உழைப்பு
அதுவே வாழ்வின் துடிப்பு!!
சோம்பலுக்கு கொடு விடுப்பு
பின் வாழ்வில் முன்னேற ஏது தடுப்பு?
உழைப்பு தரும் சிறப்பு,
அதுவே உலக நடப்பு!
இன்றே கொண்டிடு
சுறுசுறுப்பு பின்
வாழ்வில் என்றுமே
கலகலப்பு!!
தீர்க்கும் உழைப்பு
முதலில் துவர்ப்பு
பின்பு வாழ்வே இனிப்பு
அதுதான் உழைப்பு
தரும் சிறப்பு!!
உடல் உழைப்பு தரும்
வியர்வை , கரிப்பு!! -ஆனால்
வாழ்வில் அது தரும் மதிப்பு
விடுத்திடு சலிப்பு,
அல்லும் பகலும் ஏற்றிடு உழைப்பு
அதுவே வாழ்வின் துடிப்பு!!
சோம்பலுக்கு கொடு விடுப்பு
பின் வாழ்வில் முன்னேற ஏது தடுப்பு?
உழைப்பு தரும் சிறப்பு,
அதுவே உலக நடப்பு!
இன்றே கொண்டிடு
சுறுசுறுப்பு பின்
வாழ்வில் என்றுமே
கலகலப்பு!!
காதலர் தின பரிசு
நீ கடல் தாண்டி இருந்து
அனுப்பும் மலர் கொத்துகளை
ஆசையாய் நுகர்ந்து பார்த்தேன்,
மலரின் வாசத்திற்காக அல்ல
உன் மூச்சின் வாசத்திற்காக!!
உன் அன்பின் வாசத்திற்காக!!
அனுப்பும் மலர் கொத்துகளை
ஆசையாய் நுகர்ந்து பார்த்தேன்,
மலரின் வாசத்திற்காக அல்ல
உன் மூச்சின் வாசத்திற்காக!!
உன் அன்பின் வாசத்திற்காக!!
உனை என்னுள் ...
நாம் ஒன்றாய் இருந்த
நொடிகளை நினைவென்னும்
நூலில் கோர்த்துள்ளேன்….
உன் முத்துச் சிரிப்பு
உன் காந்த பார்வை
உன் சிவந்த வெட்கம்
உன் குறும்பு பேச்சு
உன் கொலுசின் ஒலி
உன் காதணிகளின் ஆடல்
உன் மென்மை விரல்கள்
உன் பூப்போன்ற பாதம்
உன் மெல்லிய விசும்பல்
உன் அழகிய கொஞ்சல்
உன் சிக்கனமான சினுங்கல்
அனைத்துமே தவனை முறையில்
எனை கொல்லுதடி
தேடிப் பார்க்கிறேன் உன்னை
காணவில்லை நீ
உன் நினைவுகளை தந்து –எனை
உறையச் செய்யும்
என் காதல் தலைவியே!!
நாம் ஒன்றாய் இருந்த
நொடிகளை நினைவென்னும்
நூலில் கோர்த்துள்ளேன்…என்றும்
கோர்த்துக்கொண்டே இருப்பேன்…
உனை என்னுள் சேர்த்துக் கொள்ள
துடிப்பேன்!!
நொடிகளை நினைவென்னும்
நூலில் கோர்த்துள்ளேன்….
உன் முத்துச் சிரிப்பு
உன் காந்த பார்வை
உன் சிவந்த வெட்கம்
உன் குறும்பு பேச்சு
உன் கொலுசின் ஒலி
உன் காதணிகளின் ஆடல்
உன் மென்மை விரல்கள்
உன் பூப்போன்ற பாதம்
உன் மெல்லிய விசும்பல்
உன் அழகிய கொஞ்சல்
உன் சிக்கனமான சினுங்கல்
அனைத்துமே தவனை முறையில்
எனை கொல்லுதடி
தேடிப் பார்க்கிறேன் உன்னை
காணவில்லை நீ
உன் நினைவுகளை தந்து –எனை
உறையச் செய்யும்
என் காதல் தலைவியே!!
நாம் ஒன்றாய் இருந்த
நொடிகளை நினைவென்னும்
நூலில் கோர்த்துள்ளேன்…என்றும்
கோர்த்துக்கொண்டே இருப்பேன்…
உனை என்னுள் சேர்த்துக் கொள்ள
துடிப்பேன்!!
வாழும் காலம் தோறும்!!
வெண்ணிலவே,
என் வானில்
தோன்றிய
ஒளிநிலவே!!
என் கண்நிலவாய்
உனைக் காப்பேன்
என்றும் கவின் நிலவே!!
எழில் நிலவே,
வளர்பிறையாய் நீ வளர
தேய்பிறையாய்
என் வாழ்வளிப்பேன்,
முழு நிலவாய்
ஒளிர்ந்திடு வாழ்வில்!!
என் மடியில்
பூத்த தங்கநிலவே,
வான் நிலவிலும்
களங்கம் இருக்கலாம்
என் வாழ் நிலவே
நீயோ என்றுமே
களங்கமற்ற
தரை நிலவு!!
பொன்னிலவே ,
பிறர் போற்றிட
பொழிந்திடு மழையாய் அன்பினை
வாழும் காலம் தோறும்!!
என் வானில்
தோன்றிய
ஒளிநிலவே!!
என் கண்நிலவாய்
உனைக் காப்பேன்
என்றும் கவின் நிலவே!!
எழில் நிலவே,
வளர்பிறையாய் நீ வளர
தேய்பிறையாய்
என் வாழ்வளிப்பேன்,
முழு நிலவாய்
ஒளிர்ந்திடு வாழ்வில்!!
என் மடியில்
பூத்த தங்கநிலவே,
வான் நிலவிலும்
களங்கம் இருக்கலாம்
என் வாழ் நிலவே
நீயோ என்றுமே
களங்கமற்ற
தரை நிலவு!!
பொன்னிலவே ,
பிறர் போற்றிட
பொழிந்திடு மழையாய் அன்பினை
வாழும் காலம் தோறும்!!
Subscribe to:
Posts (Atom)