Saturday, May 24, 2008

மரண சாசனம

மரணம் எப்பொழுது வேண்டுமானாலும் மனிதனுக்கு ஏற்படும். ஏற்படுகின்ற சமயம் சில நேரங்களில் ஒரு மனிதன் வாழும் காலங்களில் வாழ்ந்த வாழ்க்கைக்குப் புரம்பாக அவன் மரண நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனை தவிர்த்திட இது போன்ற மரண சாசனம் பயன்படும் என்ற காரணம் கருதி இத்தகு சாசனம் எழுதுகின்றேன்!!

என் மரணத்திற்குப் பின் ...

1)
எந்த சடங்கும் நடைபெறக்கூடாது
2)
நெற்றியில் பட்டையோ அல்லது வேறு மதக்குறியிடுகள் இடுதல் கூடாது
3)
குளிப்பாட்டுதல், புது துணி அணிவித்தல் , தேவாரப் பாடல்கள் பாடுவது கூடாது
4)
கண்களை நான் இறந்த 6 மணி நேரத்திற்குள்ளாக தானம் செய்ய வேண்டும்
5)
என் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தருதல் வேண்டும்
6) 16 -
ஆம் நாள் சடங்கு என்று எதுவும் கூடாது
7)
இறப்பிற்குப் பின் தேவசம் கூடாது. என் நினைவு நாள்தனில் ஏதாவது செய்ய விரும்பினால் பகுத்தறிவு பிரச்சாரமாக இருக்கட்டும்!!

இதுவே எனது மரண அவா!!

No comments: