உணர்ச்சியற்று
மானமிழந்து
மரக்கட்டையாய்
வாழ்ந்த மந்தைக்கூட்டத்தை
நீங்களும் மனிதர்கள்தான்
என்ற உணர்வினையும்
மானமும் அறிவும்
பகுத்தறியும் தன்மையும்
ஊட்டி
கூன் விழுந்த
முதுகினை நேராய்
நிமிர்த்தி
தாழ்ந்த தலையினை
தலைநிமிரச் செய்த
ஈரோட்டுச் பகுத்தறிவுச் சூரியனே!!
உந்தன் கருப்பு கதிர்கள்
எங்களின் இழிவினை பொசுக்கியது
உந்தன் எழுச்சிக்குரல்
எங்களின் இனத்தினை காத்தது
வாழ்வின் வெளிச்சத்தினை
எங்களுக்கு காட்டிவிட்டாய் -இனி
அறிவினை தடுப்போரின்
இழிவினை சுமத்துவோரின்--பிறவி
பேதத்தை போற்றுவோரின் கொட்டத்தை
உன் அரிமா கூட்டம் அடக்கும்!!
இறுதி மூச்சு உள்ள வரை
இறுதிச் சொட்டு குருதி
உள்ள வரை
ஆதிக்கத்தினால் ஆர்பரிக்கும்
ஆதிக்க நரிகளை
உன் பகுத்தறிவுச்
சேனை வீழ்த்தும்!!
இது உணர்ச்சியால்
கொப்பளிக்கும் வார்த்தைகள்
அல்ல!!- இது
நன்றியின் வெளிப்பாடு
அய்யாவே உனை வாசிக்கவில்லை -நாங்கள்
சுவாசிக்கின்றோம்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment