காஞ்சியின் மடியில்
பூத்த குறிஞ்சி மலரே!!
பாரெங்கும் பெரியாரின்
பகுத்தறிவு மணம் வீசச்
செய்த இரும்பு நெஞ்சமே!!
தந்தையின் கட்டளைகளை
தீரத்தோடு நிறைவேற்றிய
வீரத்தின் விளைநிலமே!!
அஞ்சாமலே அரும்பணிகள்
ஆற்றிட்ட கொள்கைச்செம்மலே!!
உன் நூற்றாண்டு விழாவினை
கொண்டாடும் இவ்வேளையில்
நினைத்துப்பார்க்கின்றோம்!!
ஏத்தன்ஸ் நகரின் புரட்சி
தந்தை சாக்ரடீசுக்கு ஒரு
பிளாட்டோ;
திராவிட நாட்டின் புரட்சி
தந்தை பெரியாருக்கு நீ!!
திராவிடத் தந்தையின்
தளபதியே!!
தப்பிழைத்தோரையும்
தம்பி என அழைத்தே
நின் பாச வலையினில்
உருகச் செய்தாய்;
வசீகரப்பேச்சில் வளைத்தாய்;
கருத்தழகு எழுத்தாற்றலில் கவர்ந்தாய்;
அறிஞர் எனின்
நீ மட்டும் என்றே
அழியாப் புகழ்
பெற்றே திகழ்ந்தாய்!!
இன்றும் திகழ்கிறாய்!!
என்றும் திகழ்வாய்!!
வேந்தே வாழ்க நின் புகழ்!!
No comments:
Post a Comment