உள்ளதை உள்ளபடி
உரைத்திடும் உணர்வாய்
உணர்வுகளின் வெளிப்பாடாய்
துயரத்தின் வடிகாலாய்
காலத்தினால் அழிக்க முடியா
அன்பின் ஊற்றாய்
ஆழ்கடலும் அழித்திடும்
துன்பம் வருகையில்,
கரை சேர்த்திடும் ஓடமாய்
கண்ணை இமை காப்பதுபோல்
காத்திடும் அரணாய்
மகிழ்ச்சியை மட்டுமே
பரிசாய் தந்திடும்
அரசனாய்
தன்னம்பிக்கை தரும்
நம்பிக்கையாய்
காலங்கள் கடந்தாலும்
அழியா பற்றுடன்
உனை என்றுமே
தாங்கும் நட்பு
வரலாற்றின் பொன்னேடுகளில்
பொறிக்கப்பட வேண்டிய
கைமாறு எதிர்பாரா
பாசத்தின் சின்னம் !!
No comments:
Post a Comment