புலியும் சிங்கமும்
தன் இனம் அழிக்க துணியா!!- ஆனால்
ஆறறிவு பெற்ற மனித இனம்
அறிவியல் கண்டுபிடிப்பு
அத்துணையையும் தன் இனத்தின்
அழிவிற்காய் பயன்படுத்தும்
தன்னல உருவங்களாய்!!
ஆறாம் அறிவினை
சிறிதும் பயன்படுத்தா
மூடர்களாய் அவனியிலே
உலவிடும் இனம்!!
பகுத்தறிவு கொண்டே சிந்தித்து
செயல்படா மிருகமும் தன் இனம்
அழியும் போது கண்ணீர் சிந்திடும் ;
மனம் துடித்திடும்;-ஆனால்
மதங்'கள்' தந்திட்ட போதையால்
சாதி'கள்' தந்த
பித்தத்தினால் ஒன்றுமறியா
தன் அண்டை
மனிதன் அழிவுறும்போதும்
குருதியில் வலிகொண்டு துடித்திடும்போதும்
கைகொட்டியே சிரித்திடும்
ஆனந்த கூத்தாடிடும்
மனிதம் வற்றுப்போன
அருவருப்பான மனித ஆந்தைகள்!!
நாட்டில் உலவிட தடையிட்டு
காட்டினில் விடினும்
ஒற்றுமை கொண்ட மிருகங்களையும்
பிரித்தே கொன்றிடும்
கொடூர மதியாளர்கள்!!
இனி இந்த
மனித கோட்டான்கள்
உலவிட உகந்தயிடம்
மன'நல' காப்பகங்கள் மட்டுமே!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment