தேனினும் இனிய
சுவை கொண்ட தமிழே!!- நீ
அறிவுச்சுரங்கத்தின்
மொழியாய் ஒளிர்ந்திடும் நாள்
எந்நாள்?
பக்தி மொழியாய்
முதலையுண்ட பெண்ணை
உயிர்பித்த மொழியாய்
தாளிட்ட கோயில் கதவினை
திறந்திட்ட மொழியாய்
பொய் கதைகள்
உன்மேல் புனைந்திட்டே -உன்
அறிவியல் வளர்ச்சி
தடுத்திட்டார் செம்மொழியே!!
இத்துனை அற்புதங்கள்
நீ நிகழ்த்தியிருப்பதாய்
கூறிடும் கனவான்கள்தான்
நீ வழிபாடு மொழியெனின்
உனை 'நீச' மொழியென்றே
ஓடுகின்றார் ஒரு காதத்திற்கு!!
பக்தி மொழியாய்
உனை ஆக்கிட்ட
சூதும் உனக்கு
புரிகின்றதா
என் தாய் தமிழ் மொழியே!!??
தேவாரமும் திருவாசகமும்
கல் மனதினையும் உருகிடச் செய்திடும்
என்றே கூவுவார்- ஆனால்
சிதம்பரத்தில் பாடிட சென்றிடும்
தீட்சதரை துரத்தியே அடித்திடுவர்!!
பக்தி மொழி தெய்வ மொழி
எனவே உனை அழைப்பர்
கோயில்களில் உனை துரத்தியடித்திடும்போது
கடவுள் சிலைகள் 'கல்'லாய் அமர்ந்தனவே!!
அப்பொழுதும் புரிந்திடவில்லையா தமிழே
சில ஆதிக்க வர்க்கத்தின் எண்ணம்??
உனை பக்தி மொழியாய் மாற்றியே
நம் மக்கள் மதியில் பக்தி
போதையினை ஏற்றியே
சிந்திக்க விடாது தடுத்திட
உனை அறிவியல் மொழியாய்
வளர விடாது தடுத்திடவே- சில
சாணக்கியர்கள் செய்த ஏற்பாடு!!
புரிந்திடு இதனை என் தமிழே!!
இந்திப்பெண் ஆதிக்கம்
கொள்ள வரும்போது உன் வலிக்கரம்
கொண்டு தடுத்தனை!!- ஆனால்
பக்தி போதையில் நீ் சிக்குண்டு
தொலைந்து போகாதே!!
கடவுளின் கற்பனை அற்புதங்களை
ஒழுக்கமற்ற லீலைகளை
செப்பியது போதும்!!
அறிவியல் உண்மைகளை
வான் அறிவியலை
மருத்துவ குணங்களை
புதிய கண்டுபிடிப்பினைப் பற்றியே
அழகு தமிழில்
படைத்திடு!!
காலங்கள் கடந்து அறிவு வளர்த்திடு!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment