Thursday, December 13, 2007

ஆசை

துளி துளி மழையில்
துள்ளி ஓட ஆசை
துள்ளுகையில் உன்
கை பிடிக்க ஆசை
பிடித்த கைதனில் மழைத்துளியாய்
முத்தமிட ஆசை
மழை தந்த குளிரின்
நடுக்கத்தில் உனை
கட்டியணைக்க ஆசை
உன் சுவாசத்தின் வெப்பத்தில்
எனை மறக்க ஆசை
உன் உயிரில் கரைந்து
எனை தேடிட ஆசை
உன் மடி உறங்கி
எழுந்திட ஆசை
மரணத்திலும் உன்
அரவணைப்பில் மடிய ஆசை

No comments: