Tuesday, November 6, 2007

கவிதை துளிகள்!!

புரட்சி

மக்களை புண்ணாக்கும் விதிகளை
மண்ணோடு மண்ணாக்கும்
வீரத்தின்
பொதுநலத்தின்
விவேகத்தின்
ஆயுதம்!!


கண்ணீர்

மனித துன்பத்தின்
விலையில்லா மருந்து!
கடல் நீரும் - கண்ணீரும் ஒன்றுதான்
ஆம்!

கடல் நீர் கரிக்கும்
கரையை அரிக்கும்
கண்ணீரும் கரிக்கும்
கவலையை அரிக்கும்!!


காதல்

சில எதிர்பார்ப்புகளில்
கட்டப்படும் வாழ்க்கை
கட்டிடம்!

புயலில் புரண்டும்விடலாம்
இடியில் இடிந்தும்விடலாம்
சுனாமியால் அழிந்தும்விடலாம்
அட!!
இவையெல்லாம்
காதலர்களுக்குத்தான்!
இது
சாகாவரம் பெற்று
பலரை சாகடித்துக்கொண்டிருக்கும்
விந்தையான உணர்வு!!

No comments: