Tuesday, November 6, 2007

அன்பென்னும் இசை!

மனதினில் இருக்கும் சோகங்களின் வடிகால்
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்தாலும்
இரு மனங்களை ஒன்றாக்கும் அற்புத வரம்!!
காயங்கள் ரனமாகிப்போனால்-சில்லிடும்
காற்றேன மனதினை குளிரவைக்கும் மருந்து-இது
மனங்களை மட்டும் அல்ல மதங்களையும் ஒன்றாக்கும்!!
மக்களை மனித மாண்போடு நினைக்கும் குணம்!!
அழிவினை ஆக்கமாக்கும் ஆற்றால் மிக்கது
கண்ணீரால் கரையும் கண்களை புன்னகை பூக்கச்செய்யும் புல்லாங்குழல்!!
இந்த புல்லாங்குழலின் இசை அறிந்தவர் மட்டுமே வாசிக்க வேண்டும் என்றல்ல!!
எவர் வேண்டுமானாலும் வாசிக்கலாம்-நேசத்தோடு வாசிக்கலாம்!
அந்த நேசத்தில் மலரும் அன்பென்னும் இசை!
மௌனத்தின் , கண்களின் மொழி- அன்பென்னும் இசை!

No comments: