பள்ளிக்கூட மணி அடித்தது!
பார்வையில் ஏக்கம் தேங்கிட
புத்தகம் ஏந்திடும் சிறார்களை
வெறுமையோடு நோக்கிய இருகண்களில்
கண்ணீர்த் துளிகள்!
ஆசையாய் இருந்தது
அவனுக்கும்!
அம்மாவின் உணவோடு
அப்பாவின் அரவணைப்பில்
பள்ளியில் நுழைந்திட!
காலை வணக்கப்பாடல்
காதில் ஒலித்தது!-ஆனால்
அவன் வயிற்றுப் பசி
காதை அடைத்தது!!
அந்த பிஞ்சுக் கால்கள்
பின் நோக்கி நடந்தன
மண் சுமக்க!!
பசியின் வாட்டத்திலும்
ஏக்க ரேகை
அவனின் முகத்தில்
முதிர்ந்த கோடுகளாய்...!!
This Poem explains a child who is involved in child labor but who's desire is to study and his emotions when he sees other children of his age marching to school.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment