Tuesday, November 6, 2007

இருள் வானில் புரட்சி மின்னலாய்...

இருள் வானில்
புரட்சி மின்னலாய்
தோன்றிய ஈரோட்டுச் சங்கநாதமே!


ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின்
கூன் நிமிர்த்திட்ட
வெண்தாடி வேந்தரே!

ஆணாதிக்க சமுதாயத்தில்
பெண்ணினத்தின் அடிமைவிலங்கை
உடைத்த திராவிடத்தந்தையே!

மூடத்தனத்தில் மூழ்கிப்போன
சமுதாயத்தை அறுவைசிகிச்சை
செய்த சமூகமருத்துவரே!

ஆதிக்கத்தின் அடிபீடத்தை
ஆணிவேரை அடியோடு
அறுத்திட்ட விடிவெள்ளியே!

படமெடுத்து ஆடிய
சாதிப்பாம்பை தடிகொண்டு
விரட்டிய சரித்திர நாயகரே!

அறிவிற்கு விலங்கிட்ட
சிறுநரிகளை உன் சிம்மக்குரலால்
கதிகலங்க செய்த எங்கள் அய்யாவே!


வயிற்றுவலி உயிர்குடித்தபோதும்
சூறாவளியாய் சுழன்று
மானத்தை மீட்டுத்தந்த கருப்புச்சிங்கமே!

இனமானம் காத்திட
இடியாய் முழங்கிய
செந்தமிழ்நாட்டின் சிந்தனை சிற்பியே!

தள்ளாத வயதிலும்
தள்ளாடிய சமுகத்தை
நின்பலம்கொண்டு தலைநிமிர்த்தினாய்!


வாழ்க நின் புகழ்
வளர்க வையம் நின்
பகுத்தறிவு பாதையில்!!

This Poem describes the great deeds of Thanthai Periyar - Socartes of South India on behalf of his 129th Birthday celebrated today.(September 17th)

No comments: