ஆழ் கடலும் சில நேரம்
அமைதி கொள்ளும்- ஆனால்
காதல் தோல்வியுற்ற மனம்
கனவிலும் அமைதி கொள்வதில்லை!
என்றான் காதலில் தோல்வியுற்ற வாலிபன்
தம்பி,
ஆழ் கடலும் சில நேரம்
அமைதி கொள்ளும்- ஆனால்
காதல் பெயரால்
கடமை மறந்து
கண்ணியம் விடுத்து
வாழ்வினை வீணடிக்கும் நீ!! -உன்
பெற்றோரின் மனது
ஆழ் கடலின் சூறாவளியாய்
கொதிக்கும் தீப்பிழம்பாய்
குமறும் எரிமலையாய்
புழுவாய் துடிப்பதை
அறிவாய்!!
உன் ஏற்றம் காண
ஏங்கும் உள்ளங்களை
துயரில் ஆழ்த்தாமல்
துன்பத்தை தகர்த்து
சாதிக்க புறப்படு!!
காதல் சரித்திரம்
பின்பு படைக்கலாம்!-புது
சரித்திரம் படைத்திட
புறப்படு!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment