Tuesday, November 6, 2007

இயற்கையின் எச்சரிக்கை!

மழையாய்,
மரமாய்,
பூவாய்,
காயாய்,
கனியாய்,
விலங்காய்- என்றும் இயற்கை மனிதர் நலம் நாடும்!

ஆனால், மனித இனமே!
மழை தரும் மரங்களை வெட்டினாய்!- தண்ணீர்ப்
பஞ்சம் தலைவிரித்தாடியது!


உன் இருப்பிடம் அமைக்க
என் காடுகள் அழித்தாய்!

உன் தலைமுறை செழிக்க
என் தலைமுறையை அழிக்கின்றாய்!

செயற்கை வாழ்வு வாழ்கிறாய்
இயற்கையை அழித்து!

யானையும் புலியும் உலவிடும்
கானகத்தில் கட்டிடம் கட்டினாய்!- பின்

யானையால் தொல்லை!
புலியால் பயம் !
மக்கள் பீதி என்கிறாய்!

இயற்கையின் உரைவிடம் அழித்து
இன்பம் தேடும் மனிதனே!

நீ செய்த தவற்றால்!

வெப்பத்தால் கடல் நீர் உயர்வு!
கடல் கண்ட சோழபுரம் போல்!
கடல் கொண்டு செல்லும் பல ஊர்களை!

உன் சமுதாய முன்னேற்றத்திற்கு நாங்கள் தடையில்லை!
ஆனால் இயற்கையை அழித்து அழிவை தேடாதே!

உன் அழிவுப் பணி தொடர்ந்தால்
அழியப் போவது உன் இனம்தான்
எச்சரிக்கை!

This Poem says about the Nature's Warning to Mankind for we had destroyed Nature's beauty and resources.

No comments: