Tuesday, November 6, 2007

கவிதை துளிகள்!!

கண்கள்

வெள்ளைத் தாமரைக்குள்
விழுந்தாடும் இருகருவண்டுகள்!!

மனது

பாரமாய் இருக்கும்போது
பாய்மரமாய் தள்ளாடும்!
மகிழ்ச்சியில் பம்பரமாய்ச்சுற்றும் , பட்டாம்பூச்சியாய்
பறக்கும் விசித்திர காந்தம்!!



கல்லறை

காற்றும் புகாமல் மனிதனை
அமைதியாய் உறங்கவைக்கும்
கற்கட்டில்!!


வீடு

வீதியோரம் இதனை தேடுவோர்
இருக்க - சிலருக்கு
இது ஆடம்பரச்சின்னம்!!

No comments: