கண்கள்
வெள்ளைத் தாமரைக்குள்
விழுந்தாடும் இருகருவண்டுகள்!!
மனது
பாரமாய் இருக்கும்போது
பாய்மரமாய் தள்ளாடும்!
மகிழ்ச்சியில் பம்பரமாய்ச்சுற்றும் , பட்டாம்பூச்சியாய்
பறக்கும் விசித்திர காந்தம்!!
கல்லறை
காற்றும் புகாமல் மனிதனை
அமைதியாய் உறங்கவைக்கும்
கற்கட்டில்!!
வீடு
வீதியோரம் இதனை தேடுவோர்
இருக்க - சிலருக்கு
இது ஆடம்பரச்சின்னம்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment