Sunday, November 4, 2007

நினைவிருக்கட்டும் பெண்ணே...


வாழ்க்கைப் பாதையில்
வல்லூறுகள் பயமுறுத்தும்
மெல்லினமாய் நீயிருந்தால்
வல்லினமாய் மாறிடு !!
துன்பத்தின் நிழலும்
தூரமாய் உனைவிட்டோடும்!!
உன் அடையாளம்
அழிக்கத் துணியும் சில
ஆதிக்க கோட்டான்களை
அவனியின் மூலையிலும்
உலவ விடாதே !
உன் புன்னகை
போதை! - என உளறும்
சில பித்தன்கள்மத்தியில்- உன்
புன்னகைத் தென்றல்
புரட்சிப்புயலாய் மாறட்டும்!!
உன் விழியிரண்டும்
வேல் என வர்ணிக்கும்
மூடர்களுக்கு - வேலின்
கூர்மையை உணர்த்திடு !
உன் அடிமைவிலங்கு
உடைக்கப்படும் என
காத்திராதே மயிலே!!
இறகைபிடுங்க
வருவார் சிலர்!!
ஆதிகத்தின் உடும்புபிடியை
ஈரோட்டுச் சம்மட்டியால்
உடைத்து,
உனைச்சுற்றி பின்னிடப்படும்
சதியை உன் மதியால் வென்றிடு !
கதி உனக்கிலை என
கழறும் கபடர்களை
சகதியில் மிதித்து
அவனியை வென்றிட புறப்படு!
சாதிக்கவே உன் பிறப்பு
நினைவிருக்கட்டும் பெண்ணே...

No comments: