கள்ளமில்லா உயிர்கள்
களவாடப்பட்டது!
கருணையற்ற கள்வர்களால்!
குருதி ஓட்டத்தில்
சுதந்திரம் பிறப்பதில்லை
தீப்பந்தம் அகல்விளக்காவதில்லை!
பாலைவனத்தை சோலைவனமாக்குவதே
புரட்சி!
தீமையை பொசுக்க
தீவிரவாதம் தீர்வில்லை!
தீவிரவாதம் சமுதாய
பக்கவாதம்!
மக்களின் கண்ணீரில்
மாளிகை கட்டப்படுவதில்லை!
மனிதத்தால் மாற்றம்
காண்பதே அறிவு!
மனிதம் தழைக்க
மதம் தடையென்றால்
மதத்தை விடுத்து
மனிதத்தை மனதில்
பதித்து
தீவிரவாத தீயை
தீர்க்கமாய் தீர்க்க
உணர்ச்சிப் பிழம்பாய்
பயணங்கள் தொடர்வோம்...
This Poem was written when the blast took place at Hyderabad... It depicts the need to abolish Terrorism...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment