நாவினை அசைத்துப்பாடிடும்
தாலாட்டு தளிர் மொட்டினை
வளர்த்திடும் நீர் ஊற்று
வாழ்க்கையின் தத்துவத்தினை
தாராளமாய் பகன்றிடும் தாலாட்டு
வாழ்க்கையை எதிர்கொள்ளும்
விதத்தினை துணிவாய்
பாட்டில் பகன்றிடும்
தாலாட்டு
தாயின் கனிவை
தந்தையின் கண்டிப்பை
உறவுகளின் எண்ணங்களை
அறிவுடனே அளந்திடும்
தாலாட்டு
சுமையில்லா குழந்தைக்கு
இமைகளை சுமையாக்கித் தூக்கந்தனை
வரவழைத்திடும் என்
தாய் தமிழ்நாட்டின்
அற்புத அறிவுப்பாட்டு
வாழ்க்கைப்பாட்டு
தாலாட்டு
அதனைக் கேட்டு
நீயும் தலை ஆட்டு!!
No comments:
Post a Comment