இளமானே
மயக்கறு மயிலே
மாசில்லா குணமொழியே
குன்றா அன்பின் ஊற்றே
குயிலின் குரல் கொண்ட
குணாளன் எந்தன் குயில்மொழியே
நிறைவாய் வாழ்ந்திடலாம் நாமே
என்றும் என் நிறைமொழியே
தேனாய் பேசிடும் தேன்மொழியே
வெண்கல மணி ஓசையில்
சிரித்திடும் என் மணிமொழியே
செவ்விதழ் கொண்டே அமிழ்தை
தந்திடும் என் செம்மொழியே
என் வாழ்வே, என் உயிரில்
கலந்திட்ட கனிமொழியே
மலரின் மென்மை கொண்ட
பூமொழியே!!
அறிவாய் அறிவுரை வழங்கிடும்
என் மதிமொழியே
உன் அன்பின் அருள் வேண்டும்
எனக்கு என் அருள்மொழியே
உனை என்றுமே நேசித்திடும்
உன் மணிமொழியன்
என் அன்பினை
தமிழ்மொழி கொண்டே
விரித்திடும் கடிதமொழி இதுவே!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment