காதல் உலகம் உனக்கென ஒன்று
கனப்பொழுதில் அமைப்பேன் என் கண்மணியே
காலங்கள் கடந்துபோயினும் நான் கொண்ட
கள்ளமற்ற அன்பு என்றுமே
கானல் நீராய் மாறாது என் மகிழம்பூவே!!
கன்னித்தமிழின் சுவையாய்
இனித்திடும் உன் பேச்சினை
காலந்தோறும் கவிதையெனவே சுவைப்பேன்!!
நீ என்னோடு இருந்திட்ட நொடிகளை;
என் வாழ்வினில் வாழ்விணை நீ
எனக்களித்த இன்ப நிமிடங்களை;
மரணம் தழுவையிலும் என் மனம் மறந்திடா!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment