ில மரணங்கள் நம்மை அதிரவைக்கும்;இடியென மனதில் ஒரு அதிர்வினை தரும். அப்படிப்பட்ட நேரங்களில் செய்வதரியாது மனம் குமுறும்.
நண்பர்கள் தினம். என்றுமே மறக்க முடியா ஒரு விழா. நண்பர்கள் இருக்கும் எவர் வாழ்வும் வீண் இல்லை. அதுவும் குறிப்பாக கல்லூரியில் பயிலும் அந்த நான்கு வருடங்களும் வாழ்நாளில் என்றுமே மனதில் வைத்து ரசிக்கப்படவேண்டிய தருணங்கள். நண்பர்களின் மகிழ்ச்சி சிரிப்பில் கிண்டல் கேலிகளில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்த பறவைகளாய் இருந்தோம். அந்த மகிழ்ச்சி பறவைகளில் ஒரு பறவையினை நன்பர்கள் தினத்தன்று ஒரு கொடூர சாலை விபத்தில் பறிகொடுத்துவிட்டோம்.
அப்ரஹாம். எங்கள் நண்பனின் பெயர். வகுப்பில் முதல் வரிசை எண் அப்ரஹாம் தான். மிகச் சிறந்த நண்பன்;அனைவரிடமும் பண்பாய்,அன்பாய் பழகக்கூடிய அற்புத மனிதன். அதிர்ந்து கூட பேச அறியா நண்பன். TCS
நிறுவனத்தில் பணியாற்றி இந்த 3 வருடங்களில் மிகச் சிறந்த நிலையினை தன் கடின உழைப்பால் அடைந்த அருமையான உழைப்பாளி. மிக எளிய குடும்பத்தில் பிறந்து தன் முயற்சியால் முன்னேறி வெற்றி பெற்றவன். குடும்ப சூழ்நிலை உணர்ந்து படித்தான். இவனை மட்டுமே நம்பி இருந்த குடும்பத்தினருக்கு மிகப் பெரிய இழப்பு. தாயின் கண்ணீரும் , தந்தையின் கதறலும் , தங்கையின் துயரமும் நெஞ்சத்தினை விட்டு அகலவில்லை. இத்துனைக்கும் அவன் மிக நிதானமாக வண்டியினை ஓட்டிச் சென்றும், தலைக்கவசம் அணிந்தும் அது என் நண்பனின் உயிரினைக் காக்க பயன்படவில்லை.
இனி நண்பர்கள் தினம் எங்களுக்கு முன் போல் இருக்கபோவதில்லை.
சில மரணங்கள் நம்மை அதிரவைக்கும்;இடியென மனதில் ஒரு அதிர்வினை தரும். அப்படிப்பட்ட நேரங்களில் செய்வதரியாது மனம் குமுறும்.
தோழனே
தோழைமையுடன் அனைவரிடமும்
பழகிய அற்புத தோழனே
பண்பும் அன்பும் நிறைந்த
இனிய நண்பனே
அதிர்ந்தும் பேசிடா
அருமை நண்பனே
உன் மரணத்தால்
எங்களின் நெஞ்சந்தனை
அதிர வைத்து மீளா
நித்திரையில் ஆழ்ந்ததும்
ஏனோ?
உன் பிரிவு
உண்மை என
அறிந்தும் ஏற்றுக் கொள்ள
மனம் மறுக்கின்றது
உன் மரணம் தந்த
இடியெனும் அதிர்வால்
வார்த்தைகளும்
மறக்கின்றது
நண்பர்கள் தினத்தில்
எங்களை விட்டுப் பிரிந்த
உன் நினைவுகள்
என்றுமே எங்கள் மனங்களில்
நிழலாடும்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment