Sunday, August 3, 2008

தாகம்

தண்ணீரின் தாகம்
தண்ணீரால் தீரும்

இலட்சியத் தாகம்
தியாகத்தால் தீரும்

தாய்மையின் தாகம்
அரவணைப்பில் தீரும்

விடுதலை தாகம்
புரட்சியால் தீரும்

அன்பின் தாகம்
புரிதலில் தீரும்

அறிவுத் தாகம்
ஆராய்தலில் தீரும்

உயிரின் தாகம்
உழைப்பால் தீரும்

தீரும் என்பதே
தாகம் மீண்டும் தாக்கிடும்
என புரிந்திட்டே
தாகம்தனைத் தீர்க்க
தொகைதொகையாய்
வழிகல் தேடியே - உன்
தாகம் தீர்த்திடுவாய் மனிதா!!

No comments: